சென்னை: இரண்டாம் நாளாகத் தொடரும் லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக சென்னையில் காய்கறிகளின் விலை உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.
பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர வேண்டும். சுங்கச் சாவடிகளை அகற்றிவிட்டு ஆண்டுக்கு ஒரு முறை சுங்கக் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் இரண்டாம் நாளாக லாரிகள் வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக சென்னையில் காய்கறிகளின் விலை உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.