என்சிசி மாணவர்களுக்கு ஆழ்கடல் நீச்சல் பயிற்சி

தமிழகத்தைச் சேர்ந்த என்சிசி மாணவர்களுக்கு, சென்னையில் ஆழ்கடல் நீச்சல் பயிற்சி அளிக்கப்பட்டது.

தமிழகத்தைச் சேர்ந்த என்சிசி மாணவர்களுக்கு, சென்னையில் ஆழ்கடல் நீச்சல் பயிற்சி அளிக்கப்பட்டது.
 தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் - நிக்கோபர் பிராந்தியத்துக்கான என்சிசி இயக்ககம் சார்பில் கல்லூரி அளவிலான என்.சி.சி. மாணவர்களுக்கு சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள அண்ணா நீச்சல் குளத்தில் ஆழ்கடல் நீச்சல் பயிற்சி அளிக்கப்பட்டது.
 கடந்த 9-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை நடைபெற்ற இந்த நீச்சல் பயிற்சியில், தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட என்சிசி மாணவர்கள், 10 மாணவிகள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு ஆழ்கடல் நீச்சல் பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டன. நிறைவு நாள் நிகழ்ச்சியில், கிழக்குப் பிராந்தியத்துக்கான என்.சி.சி. அதிகாரிகள் அப்துல் ரஹ்மான், ஜனார்த்தனன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com