தமிழகத்தைச் சேர்ந்த என்சிசி மாணவர்களுக்கு, சென்னையில் ஆழ்கடல் நீச்சல் பயிற்சி அளிக்கப்பட்டது.
தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் - நிக்கோபர் பிராந்தியத்துக்கான என்சிசி இயக்ககம் சார்பில் கல்லூரி அளவிலான என்.சி.சி. மாணவர்களுக்கு சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள அண்ணா நீச்சல் குளத்தில் ஆழ்கடல் நீச்சல் பயிற்சி அளிக்கப்பட்டது.
கடந்த 9-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை நடைபெற்ற இந்த நீச்சல் பயிற்சியில், தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட என்சிசி மாணவர்கள், 10 மாணவிகள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு ஆழ்கடல் நீச்சல் பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டன. நிறைவு நாள் நிகழ்ச்சியில், கிழக்குப் பிராந்தியத்துக்கான என்.சி.சி. அதிகாரிகள் அப்துல் ரஹ்மான், ஜனார்த்தனன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.