வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்ததத் தாழ்வுப் பகுதியால், காரைக்கால் துறைமுகத்தில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு சனிக்கிழமை ஏற்றப்பட்டது.
மேற்கு வங்கம் மற்றும் ஒடிஸாவுக்கு வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியிருக்கும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையால், காரைக்கால் மார்க் துறைமுகத்தில் சனிக்கிழமை 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.
காரைக்கால் கடல் பகுதி எந்தவொரு சீற்றமும் இல்லாமல் வழக்கமான நிலையிலேயே இருந்தது. மீனவர்கள் வழக்கம்போல், பிற்பகலில் விசைப்படகுகளை இயக்கிக்கொண்டு கடலுக்குச் சென்றனர்.