மண்டபம் அருகே ரூ.3 கோடி மதிப்பிலான 1,300 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கடல் பகுதியில் சனிக்கிழமை நாட்டுப்படகில் இருந்து ரூ. 3 கோடி மதிப்பிலான பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகளை போலீஸார் கைப்பற்றி, 2 பேரை கைது செய்துள்ளனர்.
மண்டபம் அருகே ரூ.3 கோடி மதிப்பிலான 1,300 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கடல் பகுதியில் சனிக்கிழமை நாட்டுப்படகில் இருந்து ரூ. 3 கோடி மதிப்பிலான பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகளை போலீஸார் கைப்பற்றி, 2 பேரை கைது செய்துள்ளனர்.
 மண்டபம் பகுதியில் இருந்து இலங்கைக்கு தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் கடத்தப்பட இருப்பதாக வெள்ளிக்கிழமை இரவு காவல் துறைக்குத் தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, சனிக்கிழமை அதிகாலையில் மண்டபம் காவல்துறையினர் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது முயல்தீவு அருகே சந்தேகத்திற்கு இடமாக நாட்டுப்படகு நிற்பதை பார்த்தனர்.
 அந்த படகை நோக்கி போலீஸார் சென்றபோது படகில் இருந்து இருவர் கடலில் குதித்து தப்ப முயன்றனர். அவர்களை படகு மூலம் போலீஸார் விரட்டிப் பிடித்தனர். நாட்டுப்படகை சோதனையிட்டபோது, அதில் 26 சாக்கு மூட்டைகளில் பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவற்றைக் கைப்பற்றி மண்டபம் காவல்நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.
 அவற்றில் 1,300 கிலோ கடல் அட்டைகள் இருந்தன. அவற்றை கடத்த முயன்ற தூத்துக்குடி பகுதியைச் சேர்ந்த மலையாண்டி(40) மற்றும் மண்டபம் அருகே உள்ள வேதளையை சேர்ந்த காசிம் (31) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
 இந்த வழக்கு வனத்துறையின் கீழ் வருவதையொட்டி மண்டபம் வனத்துறையினடம் கடல் அட்டைகளையும் பிடிபட்ட இருவரையும் ஒப்படைத்தனர். கடல் அட்டைகளை இருவரும் இலங்கை வழியாக வெளிநாடுகளுக்கு கடத்த திட்டமிட்டு இருந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
 மேலும் வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வனத்துறையினர் வழக்குப் பதிவு செய்து கடத்தலில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதாக என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com