நீட் தமிழ் மொழி வினாத்தாள் குளறுபடி: பதிலளிக்க சிபிஎஸ்இக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு 

நீட் தமிழ் மொழி வினாத்தாளில் உள்ள பிழைகளுக்கு கருணை மதிப்பெண் கோரிய வழக்கில் சிபிஎஸ்இ பதிலளிக்க உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது. 
நீட் தமிழ் மொழி வினாத்தாள் குளறுபடி: பதிலளிக்க சிபிஎஸ்இக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு 

நீட் தமிழ் மொழி வினாத்தாளில் உள்ள பிழைகளுக்கு கருணை மதிப்பெண் கோரிய வழக்கில் சிபிஎஸ்இ பதிலளிக்க உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது. 

நீட் தேர்வில் பிழையான 49 வினாக்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் எம்பி டி.கே.ரங்கராஜன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இம்மனு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று விசாரணைகு வந்தது. 

மனுவை விசாரித்த நீதிமன்றம் நீட் தமிழ் மொழி வினாத்தாள் குளறுபடி தொடர்பாக பதிலளிக்க சிபிஎஸ்இ-க்கு உத்தரவிட்டது. மேலும் இவ்வழக்கில் மத்திய, மாநில அரசுகளும் பதில் தர உத்தரவிட்ட நீதிமன்றம் வழக்கை ஜூன் 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com