தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இந்த ஆண்டு முதுகலை தமிழ்த்துறையில் சேரும் மாணவர்களுக்கு கட்டணம் கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பை அப்பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கர் வெளியிட்டுள்ளார். அதேசமயம், மனோன்மணியம் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 4 கல்லூரிகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டும் செலுத்த வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.