எம்.எல்.ஏ.-க்களுக்கு திருக்குறள் புத்தகம்

சட்டப் பேரவை உறுப்பினர்களுக்கு புதன்கிழமையன்று திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது. பேரவையில் தமிழ் வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கை மீது புதன்கிழமை விவாதம் நடந்தது. இந்த விவாதத்தில்
பேரவை உறுப்பினர்களுக்கு புதன்கிழமை வழங்கப்பட்ட திருக்குறள் புத்தகம்.
பேரவை உறுப்பினர்களுக்கு புதன்கிழமை வழங்கப்பட்ட திருக்குறள் புத்தகம்.

சட்டப் பேரவை உறுப்பினர்களுக்கு புதன்கிழமையன்று திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது. பேரவையில் தமிழ் வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கை மீது புதன்கிழமை விவாதம் நடந்தது. இந்த விவாதத்தில் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
தமிழ் வளர்ச்சித் துறை என்பதால், அனைத்து உறுப்பினர்களுக்கும் திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது. 
ஓலைச்சுவடி போன்ற வடிவமைப்பில் அச்சிடப்பட்ட, பெரியண்ணன் விளக்க உரையுடன் கூடிய திருக்குறள் புத்தகம் அளிக்கப்பட்டது. தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் இந்தப் புத்தகம் வழங்கப்பட்டதாக பேரவையில் தெரிவிக்கப்பட்டது.
பின்அட்டைக் குறிப்பு: முன்புற அட்டையில் நடுவில் வள்ளுவரும், இடதுபுறத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவும், வலது புறத்தில் முதல்வர், துணை முதல்வர் ஆகியோரின் படங்களும் இடம்பெற்றுள்ளன. திருக்குறளை சீனம், அரபு, கொரிய மொழிகளில் மொழிபெயர்க்கச் செய்து, திருவள்ளுவரின் பெருமையை உலகுக்குப் பறைசாற்றிய மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிப்பதாக பின்புற அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com