தமிழகத்தில் 1300 டாஸ்மாக் கடைகளை திறக்க பிறப்பித்த அரசாணைக்கு எதிரான மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
தமிழகத்தில் மூடப்பட்ட 1300 டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறக்க பிறப்பிக்கப்பட்ட அரசாணையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கறிஞர் பாலு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் அண்மையில் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.
மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள் நெடுஞ்சாலை மதுக்கடைகள் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், மனுவை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டனர்.