பசுமை வழிச்சாலை குறித்து கொலை மிரட்டல்: மன்சூர் அலிகான் கைது

சேலம் - சென்னை இடையே எட்டு வழி பசுமை சாலைத் திட்டத்தை அமல்படுத்தினால் 8 கொலைகள் விழும் என்று மிரட்டல் விடுத்தது தொடர்பாக நடிகர் மன்சூர் அலிகானை போலீஸார் கைது செய்தனர்.
பசுமை வழிச்சாலை குறித்து கொலை மிரட்டல்: மன்சூர் அலிகான் கைது

சேலம் - சென்னை இடையே எட்டு வழி பசுமை சாலைத் திட்டத்தை அமல்படுத்தினால் 8 கொலைகள் விழும் என்று மிரட்டல் விடுத்தது தொடர்பாக நடிகர் மன்சூர் அலிகானை போலீஸார் கைது செய்தனர்.
சேலம் - சென்னை இடையே எட்டு வழி பசுமைச் சாலை அமைக்க பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த சாலை அமைப்பதால் வளங்கள் பாதிக்கப்படுகின்றன என கூறி விவசாயிகள் போராடி வருகின்றனர்.இந்த நிலையில் அதற்கான இடத்தைக் கையகப்படுத்த அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு சேலம் வந்த நடிகர் மன்சூர்அலிகான் பசுமை சாலைத் திட்டத்தை அமல்படுத்தினால் 8 கொலைகள் விழும் என்று பேசினாராம்.
இதுகுறித்து தீவட்டிப்பட்டி காவல் ஆய்வாளர் சம்பத் வழக்குப் பதிவு செய்து சென்னையில் ஞாயிற்றுக்கிழமை மன்சூர் அலிகானை கைது செய்து சேலம் அழைத்து வந்தார். வழியில் ஆத்தூர் ஊரகக் காவல் நிலையத்தில் பிற்பகல் உணவருந்த மன்சூர் அலிகான் அழைத்து வரப்பட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மன்சூர் அலிகான், மத்திய, மாநில அரசு பசுமை வழிச் சாலை அமைப்பதற்கு அனைத்துத் தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்துள்ள நிலையில் அரசு தீவிரம் காட்டுவது கண்டிக்கத்தக்கது. நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டபோதே ஏராளமான இயற்கை வளங்கள் அழிந்து போயின. இதில் எட்டு வழிச் சாலை அமைக்கப்படுவதால் மழை, வனம், விவசாய நிலங்கள் போன்ற இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டு விடும் என்பதால் விவசாயிகள் போராடி வருகிறார்கள்.இதனைக் கருத்தில் கொண்டு பசுமை வழிச் சாலை அமைக்கப்படுவதை அரசு கைவிட வேண்டும் என்றார். பின்னர் அவரை போலீஸார் தீவட்டிப்பட்டி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com