காங்கிரஸ் -திமுக கூட்டணி மத்தியில் ஆட்சியில் இருந்தபோது, தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்காதது ஏன் என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை துவங்கப்பட இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. காங்கிரஸ் -திமுக கூட்டணி மத்தியில் ஆட்சியில் இருந்தபோது, தமிழக மக்கள் நலனுக்காக இதுபோன்ற எந்தவொரு முயற்சியும் எடுக்கப்படவில்லை.
தமிழக மக்களின் ஆரோக்கியத்தில் அக்கறை கொண்டுள்ள மத்திய பாஜக அரசின் திட்டத்தை ஏற்று, சில தடங்கல்களை நீக்கி இந்த மருத்துவமனை மதுரையில் அமைய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதற்காக முதல்வர் பழனிசாமி, சுகாதாரத் துறை அமைச்சர் உள்ளிட்டோருக்கு எனது நன்றிகள் என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.