திருநெல்வேலி மாவட்டம், குற்றாலத்தில் புதன்கிழமை அவ்வப்போது மிதமான சாரல் பெய்தது. நாள் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. குளிர்ந்த காற்றும் அவ்வப்போது லேசான வெயிலும் நிலவியது.
பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் அதிகளவில் கொட்டியது. ஆனால், சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவாகவே இருந்தது.