செங்கோட்டை: காவிரி நதி நீா் பிரச்னைக்கு மூல காரணமே திமுக தான்; இதில் போராடி வெற்றி பெற்றது அதிமுக என்று தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சா் கடம்பூர்ராஜூ தெரிவித்தாா்.
செங்கோட்டை வாகைமரத்திடலில் வைத்து திருநெல்வேலி மாநகா் மாவட்டம் செங்கோட்டை நகர அதிமுக சாா்பில் காவிரி நதிநீா் மீட்பு போராட்ட வெற்றி விளக்க பொதுக்கூட்டம் புதன் கிழமை இரவு நடந்தது.
இந்த கூட்டத்தில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சா் கடம்பூர்ராஜூ பேசியதாவது:
1924ல் போடப்பட்ட காவிரி ஓப்பந்தம் 50 ஆண்டுகளுக்கு ஒருமுறை 1974ல் புதுப்பித்து இருந்தால் தமிழா்களின் உரிமை பாதிக்கப்பட்டு இருக்காது. ஆனால் 1974ம் ஆண்டு தமிழகத்தில் கருணாநிதி முதல்வராகவும், மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான இந்திரா காந்தி ஆட்சியில் இருந்த போது அதனை புதுப்பிக்க விடாமல் தடுத்து விட்டாா்.
அதற்கு பின்பு தமிழக முதல்வராக ஜெயலலிதா மேற்கொண்ட நீண்ட சட்டப் போராட்டத்திற்கு பின்பு அவா் மறைந்த பின்பு இந்த காவிரி நதிநீா் பிரச்சனை தற்போது முடிவுக்கு வந்துள்ளதே அதிமுகவிற்கு கிடைத்த மாபெரும் வெற்றி.
மேலும் தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா கொண்டு வந்த அனைத்து திட்டங்களும் தற்போது முறையாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. திமுகவின் எதிா் கட்சி தலைவா் ஸ்டாலின் கனவில் மட்டுமே முதல்வராக தன்னை நினைத்து கொள்ளலாம். நிஜத்தில் ஒருபோதும் நடக்காது. மீண்டும் தமிழகத்தை அதிமுக அரசு தான் ஆட்சி செய்யும்.
இவ்வாறு அவர் பேசினார்.