10-ஆம் வகுப்பு மறுகூட்டல் முடிவு இன்று வெளியீடு

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தவர்களில் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களின் பதிவெண் பட்டியல் புதன்கிழமை வெளியிடப்படவுள்ளது. 

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தவர்களில் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களின் பதிவெண் பட்டியல் புதன்கிழமை வெளியிடப்படவுள்ளது. 
கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதி, மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தவர்களில் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களின் பதிவெண் பட்டியல் புதன்கிழமை பிற்பகல் வெளியிடப்படவுள்ளது. தேர்வர்கள் www.tndge.in   என்ற இணையதளத்தில் தங்களது மறுகூட்டல் முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம். மதிப்பெண்களில் மாற்றம் உள்ள தேர்வர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை www.dge.tn.nic.in என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்து இந்தப் பட்டியலில் இடம்பெறாத பதிவெண்களுக்குரியவர்களின் விடைத்தாள்களில் எந்தவித மாற்றமும் இல்லை என அறிவிக்கப்படுகிறது என்று தேர்வுத் துறை இயக்குநர் தண்.வசுந்தராதேவி செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com