சிறப்பு குழந்தைகள் கல்விக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சி

மனவளர்ச்சிக் குன்றிய சிறப்புக் குழந்தைகளின் கல்வி மற்றும் மேம்பாட்டு செயல்பாடுகளுக்காக நிதி திரட்டும் வகையிலான நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

மனவளர்ச்சிக் குன்றிய சிறப்புக் குழந்தைகளின் கல்வி மற்றும் மேம்பாட்டு செயல்பாடுகளுக்காக நிதி திரட்டும் வகையிலான நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.
சிறப்பு குழந்தைகளுக்காக 1994-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு மைத்ரேயி அமைப்பின் சார்பில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த அமைப்பின் மூலம் சிறப்புக் குழந்தைகளுக்கான பள்ளி, தொழிற்பயிற்சி, பராமரிப்பு, பெற்றோருக்கான ஆலோசனை மையம் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. சென்னையில் பெரம்பூர், கே.கே.நகர், தியாகராய நகர் உள்ளிட்ட 18 இடங்களில் இந்த மையம் செயல்பட்டு வருகிறது. இதில் 486 சிறப்புக் குழந்தைகள் படித்து வருகின்றனர்.
மேலும் தாம்பரம், உள்ளகரம், மேடவாக்கம் உள்ளிட்ட 6 இடங்களில் தொழிற்பயிற்சி மையங்களும் செயல்பட்டு வருகின்றன. 
இந்த நிலையில் சிறப்புக் குழந்தைகளின் நலனுக்காக நிதி திரட்டும் வகையில் சென்னை நேரு உள்விளையாட்டரங்கத்தில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரைப்பட பின்னணிப் பாடகர்கள் விஜய் பிரகாஷ், சத்ய பிரகாஷ், பூஜா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர். 
இது தொடர்பாக மைத்ரேயி அமைப்பின் தலைவர் கே.பிரபாகர், செயலாளர் ராஜ்குமார் ஆகியோர் கூறுகையில், சிறப்புக் குழந்தைகளுக்கு பலவேறு திறன்களை வளர்ப்பதன் மூலம் அவர்களுக்குப் பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்கிக் கொடுப்பதே எங்கள் நோக்கம். இந்த நிகழ்ச்சியின் மூலம் திரட்டப்பட்ட நிதி, சிறப்புக் குழந்தைகளின் கல்வி மற்றும் மேம்பாட்டுக்காக செலவழிக்கப்படும் என்று தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com