காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு குறித்த நேரத்தில் அமைக்கும் என பாஜக மாநில பொதுச் செயலர் வானதி சீனிவாசன் கூறினார்.
இதுகுறித்து திருவாரூரில் வியாழக்கிழமை செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
திருச்சியில் காவல் ஆய்வாளரால் கர்ப்பிணி இறந்த சம்பவம் துரதிருஷ்டவசமானது. இறந்த பெண்ணின் குடும்பத்துக்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியமானது, உச்சநீதிமன்ற உத்தரவின்படி 6 வாரங்களுக்குள் அமைக்கப்படும். அதற்கான பணிகள் தொடங்கப்பட்டு விட்டதாக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் தெரிவித்திருப்பதால், மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை குறித்த நேரத்தில் அமைக்கும் என்றார் வானதி சீனிவாசன்.