காவிரி மேலாண்மை வாரியம் குறித்த நேரத்தில் அமைக்கப்படும்

காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு குறித்த நேரத்தில் அமைக்கும் என பாஜக மாநில பொதுச் செயலர் வானதி சீனிவாசன் கூறினார்.
காவிரி மேலாண்மை வாரியம் குறித்த நேரத்தில் அமைக்கப்படும்

காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு குறித்த நேரத்தில் அமைக்கும் என பாஜக மாநில பொதுச் செயலர் வானதி சீனிவாசன் கூறினார்.
இதுகுறித்து திருவாரூரில் வியாழக்கிழமை செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
திருச்சியில் காவல் ஆய்வாளரால் கர்ப்பிணி இறந்த சம்பவம் துரதிருஷ்டவசமானது. இறந்த பெண்ணின் குடும்பத்துக்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியமானது, உச்சநீதிமன்ற உத்தரவின்படி 6 வாரங்களுக்குள் அமைக்கப்படும். அதற்கான பணிகள் தொடங்கப்பட்டு விட்டதாக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் தெரிவித்திருப்பதால், மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை குறித்த நேரத்தில் அமைக்கும் என்றார் வானதி சீனிவாசன்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com