உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம்: முதல்வர்​

குரங்கணி காட்டுத் தீ சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் வழங்க முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம்: முதல்வர்​

குரங்கணி காட்டுத் தீ சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் வழங்க முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: தேனி மாவட்டம் குரங்கணி கிராமத்தில் மலைப் பகுதியில் இருந்து கீழ்நோக்கி இறங்கிக் கொண்டிருந்த 26 பேர் திடீரென ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கினர். மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகத்துக்கும், மருத்துவ துறையினருக்கும் உத்தரவிட்டுள்ளேன்.
காட்டுத் தீயில் சிக்கியவர்களில் சென்னையைச் சேர்ந்த அகிலா, பிரேமலதா, புனிதா, சுபா, அருண், விவின், நிஷா, ஈரோட்டைச் சேர்ந்த விஜயா, விவேக், தமிழ்ச்செல்வி ஆகிய 10 பேர் துரதிருஷ்டவசமாக உயிரிழந்தனர். இந்த துயரச் சம்பவத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கல். உயிரிழந்த 10 பேரின் குடும்பத்துக்கும் தலா ரூ.4 லட்சமும், பலத்த காயமடைந்தோருக்கு தலா ரூ.1 லட்சமும், சிறிய காயமடைந்தோருக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.
சட்டப்படி நடவடிக்கை: காட்டுத் தீ சம்பவம் தொடர்பாக, உரிய விசாரணை மேற்கொள்ளவும், வனத்துறையிடம் உரிய அனுமதி பெறாமல் மலை ஏற்றத்துக்கு அழைத்துச் சென்றவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளேன் என்று தனது அறிக்கையில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com