பத்திரமாக வருவேன் என உறுதி கொடுத்திருந்தானே: தமிழ்செல்வன் குறித்து தந்தை கண்ணீர்

தேனி மாவட்டம் குரங்கணி - கொழுக்குமலையில் நேரிட்ட காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்த தமிழ்செல்வன் என்ற இளைஞரின் தந்தை ஆற்றொண்ணா துயரத்தில் இருக்கிறார்.
பத்திரமாக வருவேன் என உறுதி கொடுத்திருந்தானே: தமிழ்செல்வன் குறித்து தந்தை கண்ணீர்


தேனி: தேனி மாவட்டம் குரங்கணி - கொழுக்குமலையில் நேரிட்ட காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்த தமிழ்செல்வன் என்ற இளைஞரின் தந்தை ஆற்றொண்ணா துயரத்தில் இருக்கிறார்.

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த தங்கராஜ் - பூங்கொடி தம்பதியின் ஒரே மகன் தமிழ்செல்வன். பொறியியல் முடித்துவிட்டு சென்னையில் பணியாற்றி வரும் தமிழ்செல்வன், கோயில் திருவிழாவுக்காக ஊருக்கு வந்த போது, மலையேற்றப் பயிற்சிக்கு செல்ல நண்பர்கள் அழைத்ததால் குரங்கணிக்குச் சென்றுள்ளார்.

குடும்பத்தினர் மறுத்த போதும், 'பத்திரமாக திரும்பி வந்துவிடுவேன்' என்று பெற்றோருக்கு உறுதி அளித்துவிட்டு சென்ற தமிழ்செல்வன் தனது உறுதிமொழியைக் காப்பாற்ற முடியாமல் போனதுதான் சோகம்.

கொழுக்குமலையில் இருந்து தான் நண்பர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பெற்றோருக்கு அனுப்பி மகிழ்ந்த தமிழ்செல்வனுக்கு, திருமணம் செய்ய பெண் பார்த்து வந்ததாகக் கூறி கதறி அழுகிறார் தந்தை தங்கராஜ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com