ஈரோடு மாவட்டம் குண்டேரிப்பள்ளம் நீர்த்தேக்கத்தில் இருந்து வியாழக்கிழமை (மார்ச் 15) முதல் நீர் திறக்க முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: ஈரோடு மாவட்டம் குண்டேரிப்பள்ளம் நீர்த்தேக்கத்தில் இருந்து கோபிசெட்டிபாளையம் வட்டத்திலுள்ள பாசன நிலங்களுக்கு நீர் திறக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதையேற்று, வரும் வியாழக்கிழமை (மார்ச் 15) முதல் மே 20-ஆம் தேதி வரையில் சுழற்சி முறையில் தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டுள்ளேன். இதனால், ஈரோடு மாவட்டத்திலுள்ள 2,498 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.