குண்டேரிப்பள்ளம் நீர்த்தேக்கம்: நாளை முதல் நீர் திறப்பு

ஈரோடு மாவட்டம் குண்டேரிப்பள்ளம் நீர்த்தேக்கத்தில் இருந்து வியாழக்கிழமை (மார்ச் 15) முதல் நீர் திறக்க முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

ஈரோடு மாவட்டம் குண்டேரிப்பள்ளம் நீர்த்தேக்கத்தில் இருந்து வியாழக்கிழமை (மார்ச் 15) முதல் நீர் திறக்க முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: ஈரோடு மாவட்டம் குண்டேரிப்பள்ளம் நீர்த்தேக்கத்தில் இருந்து கோபிசெட்டிபாளையம் வட்டத்திலுள்ள பாசன நிலங்களுக்கு நீர் திறக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதையேற்று, வரும் வியாழக்கிழமை (மார்ச் 15) முதல் மே 20-ஆம் தேதி வரையில் சுழற்சி முறையில் தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டுள்ளேன். இதனால், ஈரோடு மாவட்டத்திலுள்ள 2,498 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com