குரங்கணி தீ விபத்து: நீதி விசாரணை தேவை

குரங்கணி மலைப் பகுதி தீ விபத்து குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் தலைவர்

குரங்கணி மலைப் பகுதி தீ விபத்து குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: குரங்கணி மலைப் பகுதியில் நடந்துள்ள கொடூரச் சம்பவத்துக்கு, அரசு அதிகாரிகளின் கவனக் குறைவே காரணம். 
கடந்த ஓரிரு வாரங்களாகவே அந்த மலைப் பகுதியில் காட்டுத் தீ பரவி வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காத அதிகாரிகள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இச்சம்பவம் தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிடுவதோடு, அந்த அறிக்கையை பொதுமக்களுக்கும் தெரியப்படுத்தவேண்டும். 
இந்தத் தீ விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com