வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வனுக்கு நிபந்தனை முன்ஜாமீன்

தகுதிநீக்கம் செய்யப்பட்ட அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் பி.வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் இருவருக்கும் சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை முன் ஜாமீன் வழங்கியுள்ளது.
வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வனுக்கு நிபந்தனை முன்ஜாமீன்

தகுதிநீக்கம் செய்யப்பட்ட அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் பி.வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் இருவருக்கும் சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை முன் ஜாமீன் வழங்கியுள்ளது.
இவர்கள் இருவரும் தங்கள் மீது பதியப்பட்டிருக்கும் வழக்கில் முன் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அதில் , மாநிலத்தில் சாலைப் பணிகள் ஒப்பந்தம் விடுவதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுகின்றன. அண்மையில், ஒரு சாலைப் பணிக்கான ஒப்பந்தம் ஆளும் கட்சிப் பிரமுகரின் உறவினருக்கு நடைமுறைகளை மீறிக் கொடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேள்வி எழுப்புவதற்காக கடந்த மார்ச் 1-ஆம் தேதி இருவரும் சட்டப்பேரவைக்குச் சென்றோம்.
சட்டப்பேரவை வாயில் அருகே நின்றிருந்த பத்திரிகையாளர்களிடம் இந்த ஒப்பந்தம் குறித்து வெற்றிவேல் பேட்டியளித்தார். அப்போது அங்கு வந்த இரு காவல் ஆய்வாளர்கள், வெற்றிவேல் பேட்டியளிப்பதைத் தடுத்ததோடு, அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். 
போலீஸாரின் இந்த நடவடிக்கைக்கு ஆட்சேபம் தெரிவித்த எங்கள் இருவர் மீதும், காவல் துறை அதிகாரிகளைப் பணி செய்யவிடாமல் தடுத்ததாக பொய்யான வழக்குப் பதிவு செய்துள்ளனர். எனவே, இந்த வழக்கில் எங்களுக்கு முன் ஜாமின் வழங்க வேண்டும் எனக் கோரியிருந்தனர். 
இந்த மனு நீதிபதி ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா முன்னிலையில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இருவருக்கும் முன் ஜாமீன் வழங்கியதோடு, இருவரும் இரண்டு வாரங்களுக்கு மதுரை தல்லாகுளம் காவல் நிலையத்தில் தினமும் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com