குரங்கணி தீ விபத்தில் சிக்கியவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த 4 தீக்காய நிபுணர்கள் குழு வியாழக்கிழமை மதுரை செல்ல உள்ளது.
குரங்கணி மலைப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கியவர்களுக்கு மதுரை மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவர்களுக்கு தீக்காய உயர் சிகிச்சை அளிப்பதற்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி தீக்காய சிகிச்சைத் துறையைச் சேர்ந்த உதவிப் பேராசிரியர்கள் ஏஞ்சலின், சுபா, ஜெயராமன் உள்ளிட்டோர் அடங்கிய நான்கு பேர் கொண்ட குழுவினர் மதுரைக்குச் செல்ல உள்ளனர்.
இவர்கள் 3 நாள்கள் அங்கு சிகிச்சை அளிக்க உள்ளதாகக் கல்லூரி முதல்வர் டாக்டர் வசந்தாமணி தெரிவித்தார்.