தமிழக காவல்துறை அதிகாரி டி.ஐ.ஜி. சோனல் வி.மிஸ்ரா, ஐ.ஜி.யாக புதன்கிழமை பதவி உயர்வு செய்யப்பட்டார். இரு எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
இதுகுறித்து தமிழக உள்துறை கூடுதல் தலைமைச் செயலர் நிரஞ்சன்மார்டி புதன்கிழமை வெளியிட்ட உத்தரவு (பழைய பதவி அடைப்புக்குள்):
சோனல் வி.மிஸ்ரா-ஐ.ஜி. மத்திய அரசுப் பணி (சென்னை ஆவடி சிஆர்பிஎப் டி.ஐ.ஜி.).
பி.சி.கல்யாண்-வணிக குற்றப் புலனாய்வு பிரிவு காவல் கண்காணிப்பாளர் (திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்).
ஜியாஉல் ஹக்- திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (சேலம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் கண்காணிப்பாளர்).
சோனல் மிஸ்ரா மட்டும் டி.ஐ.ஜி. பதவியில் இருந்து ஐ.ஜி.யாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார். மீதி 2 பேரும் பணியிட மாற்றம் மட்டும் செய்யப்பட்டுள்ளனர். பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள அதிகாரிகள், ஓரிரு நாள்களில் புதிய பொறுப்பை ஏற்பார்கள் எனக் காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.