காவிரி விவகாரத்தை திசை திருப்பவே ராம ராஜ்ய ரத ஊர்வலம்: உ.வாசுகி குற்றச்சாட்டு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தை திசை திருப்பவே, ராம ராஜ்ய ரத ஊர்வலம் நடத்தப்படுகிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி செவ்வாய்க்கிழமை குற்றம்சாட்டினா
காவிரி விவகாரத்தை திசை திருப்பவே ராம ராஜ்ய ரத ஊர்வலம்: உ.வாசுகி குற்றச்சாட்டு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தை திசை திருப்பவே, ராம ராஜ்ய ரத ஊர்வலம் நடத்தப்படுகிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி செவ்வாய்க்கிழமை குற்றம்சாட்டினார்.

விசுவ ஹிந்து பரிஷத் சார்பில் நடத்தப்படும் ரத ஊர்வலத்தை தடைசெய்ய வலியுறுத்தியும், புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டதை கண்டித்தும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்டக்குழு சார்பில் பழங்காநத்தத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் இரா.ஜோதிராம் தலைமை வகித்தார். கட்சியின் மத்திய குழு உறுப்பினர் உ.வாசுகி, மாவட்டச் செயலர் இரா.விஜயராஜன் மற்றும் நிர்வாகிகள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். 

ஆர்ப்பாட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் உ.வாசுகி கூறியதாவது:
 காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க தமிழக அரசு தயங்குகிறது. இதை திசை திருப்பவே ராம ராஜ்ய ரத யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. ரத யாத்திரையை எதிர்த்து போராட்டம் நடத்துபவர்களை காவல்துறை மூலமாக அரசு கைது செய்து வருகிறது.  அவர்களை விடுதலை 

செய்ய வேண்டும். புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரியார் சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com