புதுச்சேரி: அரசியல் சாசன சட்டப்படியே எம்எல்ஏக்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது என்பதை சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பு உறுதி செய்துள்ளதாக புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி கூறியுள்ளார்.
பாஜக எம்எல்ஏக்களின் நியமனம் செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததை அடுத்து புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், அரசியல் சாசன சட்டப்படியே எம்எல்ஏக்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது என்பதை சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பு உறுதி செய்துள்ளது. மத்திய அரசின் அனுமதியோடுதான் 3 பேரும் எம்எல்ஏக்களாக நியமனம் செய்யப்பட்டனர் என்றும் அவர் தெரிவித்தார்.