சென்னை: தனது டிவிட்டர் பக்கத்தில் கூறப்பட்ட தகவல்கள் என்று ஊடகங்களில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது குறித்து ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, சமீப காலமாக திமுக மீதும், என் மீதும் அரசியல் காழ்ப்புணர்வு கொண்ட சில சில சமூக விரோதிகள் என்னுடைய டிவிட்டரில் நான் சொல்லாத கருத்துகளை சொன்னதுபோல போலிப் பதிவுகளை பதிவிட்டு வருகிறார்கள்.
இந்த விஷமச் செயலை செய்பவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கக்கோரி காவல்துறையிடம் புகார் அளித்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
அது தொடர்பான புகைப்படங்களையும் ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.