தேதி குறிப்பிடாமல் பேரவை ஒத்திவைப்பு

சட்டப் பேரவை மீண்டும் கூடும் நாள் குறிப்பிடப்படாமல் வியாழக்கிழமை ஒத்திவைக்கப்பட்டது.
தேதி குறிப்பிடாமல் பேரவை ஒத்திவைப்பு

சட்டப் பேரவை மீண்டும் கூடும் நாள் குறிப்பிடப்படாமல் வியாழக்கிழமை ஒத்திவைக்கப்பட்டது.
 வரும் நிதியாண்டுக்கான (2018-19) நிதிநிலை அறிக்கை சட்டப் பேரவையில் கடந்த 15-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் கடந்த திங்கள்கிழமை தொடங்கி நான்கு நாள்கள் நடைபெற்றன. விவாதங்களுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வியாழக்கிழமை பதிலளித்துப் பேசினார்.
 இதைத் தொடர்ந்து, சட்டப் பேரவை மீண்டும் கூடும் நாள் குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
 இதற்கான தீர்மானத்தை அவை முன்னவரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் கொண்டு வந்தார். இந்தத் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com