சட்டப் பல்கலை. துணைவேந்தர் நியமனம்: மு.க.ஸ்டாலின் கண்டனம்

டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக துணைவேந்தராக தம்ம சூர்ய நாராயண சாஸ்திரி நியமிக்கப்பட்டுள்ளதற்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக துணைவேந்தராக தம்ம சூர்ய நாராயண சாஸ்திரி நியமிக்கப்பட்டுள்ளதற்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 இதுதொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக துணைவேந்தராக தம்ம சூர்ய நாராயண சாஸ்திரி நியமிக்கப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. சட்டப் பல்கலைக்கழக சட்டத்தின்படி, தேடுதல் குழு இறுதிசெய்து கொடுக்கும் மூன்று பேரில் ஒருவரைத்தான் துணைவேந்தராக தமிழக ஆளுநர் நியமிக்க வேண்டும். ஒருவேளை தேடுதல் குழு அளிக்கும் மூன்று பெயர்களில் ஆளுநருக்கு உடன்பாடு இல்லை என்றால், புதிதாக ஒரு தேடுதல் குழுவை நியமிக்க உத்தரவிட வேண்டும். மாறாக, தேடுதல் குழு பரிந்துரைக்காத ஒருவரை துணைவேந்தராக நியமிக்கக் கூடாது. தம்ம சூர்ய நாராயண சாஸ்திரியை சட்டப் பல்கலைக்கழக துணைவேந்தராக நியமித்திருப்பதைத் திரும்பப் பெற வேண்டும். தமிழகத்திலேயே திறமையானவர்கள், தகுதியானவர்கள் இருக்கும்போது, வெளிமாநிலங்களில் இருந்து துணைவேந்தர்களை நியமித்து, தமிழகத்தை இழிவுபடுத்துவதை ஆளுநர் கட்டாயம் தவிர்க்க வேண்டும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com