சென்னை: காவிரி உரிமைக்காகப் போராடுவதில் தவறில்லை என்று சென்னை அருகேயுள்ள அம்பத்தூரில் நடந்த மே தின பொதுக்கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பேசினார்.
சென்னை அருகேயுள்ள திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூரில் அதிமுக சார்பாக மே தின பொதுக்கூட்டம் நடந்தது. இதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலை வகித்துப் பேசினார். அப்பொழுது அவர் கூறியதாவது:
எப்பொழுதுமே உரிமைக்காகப் போராடுவதில் தவறில்லை. தமிழக மக்கள் தங்களது வாழ்வாதாரமான காவிரியில் உள்ள உரிமைக்காக போராடுவதை பாராட்டுகிறேன். ஆனால் அந்த போராட்டமானது சட்டம் ஒழுங்கினை பாதிக்காத வகையில் அமைய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.