உதகை மலர்க் காட்சி: 2 நாட்கள் நீட்டிப்பு

உதகை மலர்க்காட்சி நடைபெறும் தேதிகள் நீட்டிக்கப்பட்டுள்ளன.உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினராலும் ஆவலோடு எதிர்பார்க்கப்படும் உதகை மலர்க்காட்சி

உதகை மலர்க்காட்சி நடைபெறும் தேதிகள் நீட்டிக்கப்பட்டுள்ளன.
உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினராலும் ஆவலோடு எதிர்பார்க்கப்படும் உதகை மலர்க்காட்சி 122வது ஆண்டாக நடப்பாண்டில் மே மாதம் 18-ஆம்தேதி முதல் 20-ஆம்தேதி வரை நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது மலர்க் காட்சி தேதி நீட்டிக்கப்பட்டு 20-ஆம்தேதி நிறைவடைவதற்குப் பதிலாக 22-ஆம்தேதி வரை நடைபெறும் என தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 
உதகை மலர்க் காட்சியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மே 18-ஆம்தேதி காலை தொடங்கி வைக்கிறார். மே 22-ஆம் தேதி நிறைவு விழாவில் தமிழகஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கலந்துகொள்கிறார். கடந்த 122 ஆண்டுகளாக நடைபெற்று வரும் உதகை மலர்க் காட்சியில் இதுவரையிலும் 3 நாட்களுக்கு மேல் மலர்க் காட்சி நீட்டிக்கப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
தமிழக ஆளுநர் பங்கேற்க வேண்டும் என்பதற்காகவே மலர்க் காட்சியின் நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அரசியல் கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com