வெப்பச் சலனம் காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி செவ்வாய்க்கிழமை கூறியது:
வெப்பச் சலனம் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்ய வாய்ப்பு உள்ளது. ஓரிரு இடங்களில் பலத்த மழையும் பெய்யக் கூடும்.
வெப்பநிலையை பொருத்தவரை, தமிழகத்தில் திருவள்ளூர், வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், கரூர், மதுரை ஆகிய மாவட்டங்களில் 100 முதல் 104 டிகிரி வரை வெப்பநிலை பதிவாக வாய்ப்புள்ளது.