கர்நாடகத்தில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் , "கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்றதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓ.பி.எஸ். வாழ்த்து: முதல்வரை தொடர்ந்து, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். கர்நாடக தேர்தல் முடிவு தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா ஆகியோருக்கு வாழ்த்துத் தெரிவித்து அவர் கடிதம் அனுப்பியுள்ளார்.