கர்நாடக தேர்தல் முடிவு: பிரதமருக்கு முதல்வர் வாழ்த்து

கர்நாடகத்தில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

கர்நாடகத்தில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் , "கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்றதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓ.பி.எஸ். வாழ்த்து: முதல்வரை தொடர்ந்து, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். கர்நாடக தேர்தல் முடிவு தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா ஆகியோருக்கு வாழ்த்துத் தெரிவித்து அவர் கடிதம் அனுப்பியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com