காவிரி வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு 3 முக்கிய கோரிக்கைகளை புதன்கிழமை முன்வைக்க உள்ளது.
காவிரி வழக்கு தொடர்பான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் புதன்கிழமை நடைபெறவுள்ளது. அப்போது 3 முக்கிய கோரிக்கைகளை முன்வைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவை,
காவிரி தொடர்பான அமைப்பின் தலைமையகத்தை பெங்களூருவில் இருந்து மாற்ற வேண்டும்.
மத்திய அரசு உருவாக்க உள்ள காவிரி தொடர்பான அமைப்பிற்கு காவிரி மேலாண்மை வாரியம் என பெயர் வைக்க வேண்டும்.
இதனை உடனடியாக அரசிதழில் வெளியிட்டு அமல்படுத்த வேண்டும் என்பவையாகும்.