தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


சென்னை: வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தென் தமிழகத்தைப் பொறுத்தவரை கன மழை பெய்யக் கூடும். 

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னையில் அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும். 

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மாயனூர், துறையூர் பகுதிகளில் தலா 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கோவை மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளிலும், நீலகிரி, பல்லடம், பட்டுக்கோட்டை, மஞ்சூர், கூடலூர், தேனி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக நேற்று மழை பெய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com