தந்தையின் மதுப் பழக்கத்தைக் கண்டித்து தற்கொலை செய்த மாணவரின் மதிப்பெண் 1024!

தந்தையின் மதுப் பழக்கத்தைக் கண்டித்து, திருநெல்வேலியில் தற்கொலை செய்துகொண்ட பிளஸ் 2 மாணவர் 1024 மதிப்பெண் பெற்றுள்ளார். இதைக் கேட்ட அவரது தந்தை கண்ணீர் விட்டுக் கதறி அழுதார். 

தந்தையின் மதுப் பழக்கத்தைக் கண்டித்து, திருநெல்வேலியில் தற்கொலை செய்துகொண்ட பிளஸ் 2 மாணவர் 1024 மதிப்பெண் பெற்றுள்ளார். இதைக் கேட்ட அவரது தந்தை கண்ணீர் விட்டுக் கதறி அழுதார். 
திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் அருகேயுள்ள கு.ரெட்டியபட்டியைச் சேர்ந்த மாடசாமியின் மகன் தினேஷ் (17). இவர், நாமக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 தேர்வு எழுதியிருந்தார்.
தன் தந்தை மதுப் பழக்கத்தை நிறுத்த வேண்டும் என்றும், தமிழகத்தில் டாஸ்மாக் மதுக் கடைகளை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி அவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு, கடந்த 2-ஆம் தேதி திருநெல்வேலி ரயில்வே மேம்பாலத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 
இந்நிலையில், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் புதன்கிழமை வெளியாகின. இதில், தினேஷ் 1024 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். பாடவாரியாக அவர் பெற்ற மதிப்பெண்: தமிழ்-194, ஆங்கிலம்-148, இயற்பியல்-186, வேதியியல்-173, உயிரியல்-129, கணிதம்-194.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com