பெரியார் பல்கலை. விண்ணப்பம் வழங்கும் தேதி நீட்டிப்பு

பெரியார் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பயில்வதற்கு விண்ணப்பம் வழங்கும் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளதாக, துணைவேந்தர் பொ.குழந்தைவேல் தெரிவித்துள்ளார். 

பெரியார் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பயில்வதற்கு விண்ணப்பம் வழங்கும் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளதாக, துணைவேந்தர் பொ.குழந்தைவேல் தெரிவித்துள்ளார். 
இதுகுறித்து, புதன்கிழமை அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பெரியார் பல்கலைக்கழகத்தில் 27 துறைகளில் கற்பிக்கப்படும் 28 முதுநிலைப் பாடங்களுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி மே 25-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பெரியார் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும் பணி கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மாணாக்கர்கள் நலன் கருதி முதுநிலையில் சேர விரும்பும் மாணவர் சேர்க்கை விண்ணப்பங்களை பல்கலைக்கழகத்திலிருந்து பெற்றுக் கொள்வதற்கும், சமர்ப்பிப்பதற்குமான கடைசி தேதி மே 18-ஆம் தேதியில் இருந்து மே 25-ஆம் தேதிக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. நுழைவுத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும் துறைகளுக்கான நுழைவுத்தேர்வு ஜூன் 8-ஆம் தேதி நடைபெறும் என துணைவேந்தர் பொ.குழந்தைவேல் தெரிவித்துள்ளார்.
முதுநிலைப் பாடங்கள் குறித்தும், ஏனைய விவரங்கள் குறித்தும் அறிய பல்கலைக்கழக இணையதளத்தைப் பார்வையிடவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com