தேனி மாவட்டம் கும்பக்கரை அருவியில் நீர்வரத்து சீரானதால் வியாழக்கிழமை சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
கொடைக்கானலில் அடிக்கடி பெய்து வரும் கோடை மழையின் காரணமாக கடந்த ஒரு மாதமாகவே கும்பக்கரை அருவியில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.
சில நேரங்களில் கும்பக்கரை அருவியில் தண்ணீர் காட்டாற்று வெள்ளம் போல் வருகிறது.
இதனை வனத்துறையினர் கண்காணித்து சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கான அனுமதியை வழங்குகின்றனர். கடந்த சில நாட்களாக கும்பக்கரை அருவியில் நீர்வரத்து அதிகமாக இருந்ததால் சுற்றுலாப்பயணிகள் செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர்.
கோடை விடுமுறை காலமாக இருப்பதால் அதிகளவில் கும்பக்கரைக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
இந்நிலையில் சுற்றுலாப் பயணிகளின் கோரிக்கையை ஏற்று வனத்துறையினர் குளிப்பதற்கு வியாழக்கிழமை அனுமதி அளித்துள்ளனர்.
மேலும், அருவியில் நீர்வரத்து சீரானதால் சுற்றுலாப் பயணிகள் செல்ல விதிக்கப்பட்ட தடையை நீக்கியதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.