தூத்துக்குடியில் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது என்று டிஜிபி ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதையடுத்து காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். பலர் காயமுற்றதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து டிஜிபி ராஜேந்திரன் கூறியதாவது,
போராட்டம் தொடர்பாக தூத்துக்குடி பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். துப்பாக்கிச்சூடு நடந்ததா என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது. தூத்துக்குடியில் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணிக்காக தூத்துக்குடிக்கு கூடுதலாக போலீசார் அனுப்பப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.