புது தில்லி: ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து தமிழக அரசு விளக்கமளிக்கக் கோரி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடியில் நேற்று ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய கிராம மக்கள் மீது நடந்த துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயமடைந்தனர்.
இந்த நிலையில், துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது ஏன், துப்பாக்கிச் சூட்டை நடத்தாமல் தவிர்த்திருக்க முடியுமா என்பது குறித்து தமிழக அரசு விளக்கமளிக்ககோரி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.