அரக்கோணம் - ஜோலார்பேட்டை பிரிவில் பொறியியல் பணி: விரைவு ரயில்கள் இயக்கத்தில் நேர மாற்றம்

அரக்கோணம் -ஜோலார்பேட்டை பிரிவில் மேல்பட்டி -பச்சகுப்பம் ரயில் நிலையங்களுக்கு இடையே பொறியியல் பணி நடைபெறவுள்ளதை அடுத்து, வியாழக்கிழமை சில விரைவு ரயில்கள் ஒருசில ரயில் நிலையங்களில் சிறிது

அரக்கோணம் -ஜோலார்பேட்டை பிரிவில் மேல்பட்டி -பச்சகுப்பம் ரயில் நிலையங்களுக்கு இடையே பொறியியல் பணி நடைபெறவுள்ளதை அடுத்து, வியாழக்கிழமை சில விரைவு ரயில்கள் ஒருசில ரயில் நிலையங்களில் சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டு இயக்கப்படவுள்ளன.
இதுகுறித்து தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
1. யஸ்வந்த்பூர் -ஹவுரா ஹம்சஃபர் எக்ஸ்பிரஸ் ரயில், ஆம்பூர் ரயில் நிலையத்தில் ஒரு மணி நேரம் 10 நிமிடம் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் இயக்கப்படும்.
2. யஸ்வந்த்பூர் -ஹவுரா துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயில் விண்ணமங்கலத்தில் 45 நிமிடம் நிறுத்தப்படும். 
3. பெங்களூரு -காக்கிநாடா டவுன் சேஷாத்திரி எக்ஸ்பிரஸ் ரயில், வாணியம்பாடி ரயில் நிலையத்தில் 15 நிமிடம் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் இயக்கப்படும். 
4. பெங்களூரு -சென்னை சென்ட்ரல் டபுள்டக்கர் எக்ஸ்பிரஸ் ரயில் ஆம்பூர் ரயில் நிலையத்தில் 30 நிமிடம் நிறுத்தி வைக்கப்பட்டு மீண்டும் இயக்கப்படும்.
5. பெங்களூரு -சென்னை சென்ட்ரல் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரயில், விண்ணமங்கலத்தில் 10 நிமிடம் நிறுத்தப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com