ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி புதன்கிழமை கூறியது:
வெப்பச் சலனம் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டமாக இருக்கும். புதன்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில், திருச்சி மாவட்டம் புள்ளம்பாடியில் 70 மி.மீ. மழை பதிவானது. அருப்புக்கோட்டை, காரைக்குடி, கோவிலன்குளத்தில் தலா 30 மி.மீ. மழை பதிவானது.
வெப்பநிலையை பொருத்தவரை, திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருச்சி, பெரம்பலூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் 100 டிகிரி முதல் 104 டிகிரி வரை வெப்பநிலை பதிவாக வாய்ப்புள்ளது.
திருத்தணியில் 103 டிகிரி: தமிழகத்தில் புதன்கிழமை அதிகபட்சமாக, திருத்தணியில் 103 டிகிரி வெப்பநிலை பதிவானது. திருச்சி, வேலூரில் தலா 100 டிகிரியும், கரூர் பரமத்தியில் 99 டிகிரியும், சேலத்தில் 98 டிகிரியும் வெப்பநிலை பதிவானது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com