காஞ்சிபுரத்தில் வினாத்தாள் குழப்பம்: 16 பேருக்கு மறுதேர்வு டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

காஞ்சிபுரத்தில் வினாத்தாள் குழப்பத்தைத் தொடர்ந்து, 16 பேருக்கு வரும் ஞாயிற்றுக்கிழமை மறுதேர்வு நடத்தப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.

காஞ்சிபுரத்தில் வினாத்தாள் குழப்பத்தைத் தொடர்ந்து, 16 பேருக்கு வரும் ஞாயிற்றுக்கிழமை மறுதேர்வு நடத்தப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.
இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் 
ஆர்.சுதன் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
ஒருங்கிணைந்த பொறியாளர் பணியிடங்கள் அடங்கிய உதவிப் பொறியாளர் பதவிகளுக்கான தேர்வு காஞ்சிபுரம் உள்ளிட்ட 15 மாவட்ட மையங்களில் கடந்த 20 -ஆம் தேதி நடைபெற்றது.
அதில், காஞ்சிபுரம் எஸ்.எஸ்.கே.வி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒரே ஒரு தேர்வு அறையில் மட்டும் 16 தேர்வர்களுக்கு மின்னணு தொடர்புப் பொறியியல் வினாத்தாளுக்கு பதிலாக மின்னணு பொறியியல் வினாத்தாள் தவறுதலாக மாற்றி வழங்கப்பட்டுள்ளது.
இதை விசாரித்த தேர்வாணையம், பாதிக்கப்பட்ட 16 விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் வரும் ஞாயிற்றுக்கிழமை (மே 27) மறுதேர்வு நடத்த முடிவு செய்துள்ளது. பாதிக்கப்பட்ட 16 விண்ணப்பதாரர்களுக்கும் இதுகுறித்த விவரம் தனியே குறுஞ்செய்தியாகவும், மின்னஞ்சலாகவும் அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து சந்தேகம் ஏதேனும் இருந்தால் வேலை நாள்களில் 044-2530 0306 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com