தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: ரஜினி கண்டனம்

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியோர் மீது துப்பாக்கிசூடு நடத்தப்பட்டதற்கு நடிகர் ரஜினிகாந்த் கண்டனம் தெரிவித்தார்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: ரஜினி கண்டனம்

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியோர் மீது துப்பாக்கிசூடு நடத்தப்பட்டதற்கு நடிகர் ரஜினிகாந்த் கண்டனம் தெரிவித்தார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்ட விடியோ பதிவில், "ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது காவல் துறையின் வரம்பு மீறிய, மிருகத்தனமான செயலைக் கண்டிக்கிறேன். உளவுத் துறை உள்பட தமிழக அரசின் மொத்த நிர்வாகமும் தோல்வி அடைந்துவிட்டது. ஸ்டெர்லைட் விவகாரத்தில் அரசு அலட்சியமாக நடந்துகொண்டுள்ளது. காவல் துறையினர் வரம்பு மீறி சட்டத்துக்குப் புறம்பாக, மிருகத்தனமான செயலில் ஈடுபட்டதை வன்மையாக கண்டிக்கிறேன். உறவுகளை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என ரஜினிகாந்த் பேசியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com