தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை கண்டித்து புதுச்சேரியிலும் இன்று முழு அடைப்பு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை கண்டித்து புதுச்சேரியிலும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை கண்டித்து புதுச்சேரியிலும் இன்று முழு அடைப்பு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை கண்டித்து புதுச்சேரியிலும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி கடந்த 22ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தின்போது நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் காயமடைந்தனர். இச்சம்பத்தைக் கண்டிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் இன்று முழு அடைப்புப் போராட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன. 

இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை கண்டித்து புதுச்சேரியிலும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. முழு அடைப்பு காரணமாக அரசு பேருந்துகள், தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள் இயங்கவில்லை. மேலும் அங்கு பாதுகாப்பு பணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com