முழு அடைப்பு காரணமாக கேரளாவிலிருந்து வரும் அரசுப் பேருந்துகள் தமிழக எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தைக் கண்டித்தும் அதிமுக அரசு பதவி விலகக் கோரியும் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் இன்று முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி, திராவிடர் கழகம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, அவையும் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளன.
இந்நிலையில் முழு அடைப்பு காரணமாக கேரளாவிலிருந்து வரும் அரசுப் பேருந்துகள் தமிழக-கேரள எல்லையான கன்னியாகுமரின் களியக்காவிளையில் நிறுத்தப்பட்டுள்ளன.