முழு அடைப்பையொட்டி, சென்னையில் பாதுகாப்புப் பணியில் 20,000 போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராட்டம் நடத்திய மக்கள் மீது காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்து வெள்ளிக்கிழமை முழு அடைப்பு போராட்டம் நடத்த திமுக உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன. இதே போல வணிகர்கள் சங்கங்களும், தொழிற்சங்கங்களும் இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் முழு அடைப்பையொட்டி, சென்னையில் பாதுகாப்புப் பணியில் 20,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தலைமைச்செயலகம், டிஜிபி அலுவலகம், மெரினா, கோயம்பேடு பேருந்து நிலையம், சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.