கூடலூர் மலைப் பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 3 பேர் சாவு

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே மலைபாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலியாகினர் மேலும் பலர் காயமடைந்தனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே மலைபாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலியாகினர் மேலும் பலர் காயமடைந்தனர்.

ஊட்டியிலிருந்து பெங்களூரு நோக்கி சொன்றுகொண்டிருந்த தனியார் பேருந்து கூடலூர் அருகே தவளமலை என்ற பகுதியில் வளைவில் திரும்பும் போது எதிர்பாரத விதமாக சாலையிலிருந்து விலகி மலைப் பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த மூன்று பேர் பலியாகினர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.
விபத்து நடந்த பகுதியில் மீட்பு பணி தீவிரமாக  நடைபெற்று வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com