நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே மலைபாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலியாகினர் மேலும் பலர் காயமடைந்தனர்.
ஊட்டியிலிருந்து பெங்களூரு நோக்கி சொன்றுகொண்டிருந்த தனியார் பேருந்து கூடலூர் அருகே தவளமலை என்ற பகுதியில் வளைவில் திரும்பும் போது எதிர்பாரத விதமாக சாலையிலிருந்து விலகி மலைப் பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த மூன்று பேர் பலியாகினர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.
விபத்து நடந்த பகுதியில் மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.