என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் 25 பேர் விஷம் அருந்தி போராட்டம்

என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் 25 பேர் ஒரே நேரத்தில் விஷம் அருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் 25 பேர் விஷம் அருந்தி போராட்டம்

நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்க நிறுவனத்தில் (என்எல்சி) ஒப்பந்த முறையில் தொழிலாளர்கள் தாற்காலிகமாக பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில், இன்று (திங்கள்கிழமை) காலை சுரங்கம் 1ஏ முன்பு தங்களை பணியிடை மாற்றம் செய்யக்கூடாது என்று கூறி 25 ஒப்பந்தத் தொழிலாளர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மறியலில் ஈடுபட்டு வந்த சிலர் தங்களுக்கு இதே இடத்தில் பணி நியமிக்குமாறு கூறி விஷம் அருந்தினர். 

இதையடுத்து, விஷம் அருந்திய 5 பேர் உடனடியாக என்எல்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com