தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் உளுந்தூர்பேட்டையில் சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
புழல் சிறையில் இருக்கும் அவர் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும், துப்பாக்கிச் சூடு நடத்திய காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக அவர் கடந்த 2 நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.
இந்த உண்ணாவிரத போராட்டத்தில் வேல்முருகனுடன் 22 பேரும் உண்ணாவிரதம் இருந்து வந்தனர். இந்நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வேல்முருகனை சந்தித்தார். அப்போது, வைகோ கூறியதை அடுத்து உண்ணாவிரதத்தை வேல்முருகன் வாபஸ் பெற்றார்.