சென்னை சேத்துப்பட்டில் ஏற்பட்ட கட்டுமான விபத்தில் புதன்கிழமை 4 பேர் உயிரிழந்தனர்.
சென்னை சேத்துப்பட்டு பகுதியில் அமைந்துள்ள ஸ்பர் டேங்க் சாலையில் அமைந்திருக்கும் வேணுகோபால் அவென்யூவில் புதிய உணவக கட்டுமானம் நடைபெற்று வருகிறது.
இதில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி இதுவரை 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 2-க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பாக கீழ்பாக்கம் துணை ஆணையர் உள்ளிட்ட காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். இச்சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து தீயணைப்புத்துறை உடனடியாக வந்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.