நியூட்ரினோ திட்டம்: தமிழக அரசு கடுமையாக எதிர்க்க வேண்டும்- தினகரன்

சுற்றுச்சூழலுக்கு எதிரான நியூட்ரினோ திட்டத்தை தமிழக அரசு கடுமையாக எதிர்க்க வேண்டுமென அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணை பொதுச் செயலாளர்


சுற்றுச்சூழலுக்கு எதிரான நியூட்ரினோ திட்டத்தை தமிழக அரசு கடுமையாக எதிர்க்க வேண்டுமென அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார். 
இதுகுறித்து, அவர் தனது சுட்டுரையில் வெள்ளிக்கிழமை கூறியிருப்பதாவது:
தேனி மாவட்டம் பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. ஆனாலும், இந்தத் திட்டத்துக்கு அளித்துள்ள சுற்றுச்சூழல் அனுமதி ரத்து செய்யாதது வருத்தம் அளிக்கிறது. பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தொடர்ந்த இந்த வழக்கில் நியூட்ரினோ திட்டத்துக்கு எதிரான பலமான வாதங்களை தமிழக அரசு முன்வைக்கவில்லை. இந்த வழக்கின் மேல் முறையீட்டிலாவது, சுற்றுச்சூழலுக்கு எதிரான நியூட்ரினோ திட்டத்தை தமிழக அரசு கடுமையாக எதிர்க்க வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com